"ஊழல் குறித்து விவாதிக்க தயாரா"? - பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால்

ஊழல் குறித்து தன்னுடன் விவாதிக்க தயாரா என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார்.

Update: 2019-03-02 09:39 GMT
ஊழல் குறித்து தன்னுடன் விவாதிக்க தயாரா என்று பிரதமர் மோடிக்கு ராகுல் காந்தி சவால் விடுத்துள்ளார். மும்பையில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய அவர், இந்த சவாலை மோடி ஏற்கப் போவதில்லை என்றும், அவர் ஒரு கோழை என்றும் கடுமையாக விமர்சனம் செய்தார். பணமதிப்பு இழப்பு நடவடிக்கை ஒரு தோல்வி முயற்சி என்றும் அதனால் மக்கள் அனைவரும் வங்கி வாசலில் காத்திருந்தார்கள், அனில் அம்பானி, லலித் மோடி, விஜய் மல்லய்யா உள்ளிட்டோர் காத்திருந்தார்களா என்று கேள்வி எழுப்பிய அவர், மீண்டும் மோடி பிரதமரானால் அனில் அம்பானியின் பாக்கெட்டுக்கு 30 ஆயிரம் கோடி சென்றுவிடும் என்று தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்