மதவாத சக்திகள் வளர்வது ஜனநாயகத்துக்கு ஆபத்து - வைகோ

மதவாத சக்திகள் வளர்வது, ஜனநாயகத்துக்கு ஆபத்து என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-27 14:00 GMT
மதவாத சக்திகள் வளர்வது, ஜனநாயகத்துக்கு ஆபத்து என்று  ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில்  செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருகிறது என்றும்,  நியூட்ரினோ திட்டம், ஸ்டெர்லைட் ஆலை உட்பட அனைத்து விசயங்களிலும் தொடர்ந்து  துரோகம் செய்து வருவதாகவும் குறிப்பிட்டார்.  மதவாத சக்திகள் வளர்வது, நாட்டின் ஜனநாயகத்துக்கு ஆபத்து என்றும், அத்தகைய சக்திகளை மக்கள் எதிர்ப்பதாகவும் வைகோ தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்