குக்கர் சின்னம் - தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

இரட்டை இலை வழக்கில் 4 வாரத்திற்குள் முடிவு எடுக்கவில்லை என்றால், குக்கர் சின்னத்தை தினகரனுக்கு ஒதுக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

Update: 2019-02-07 07:27 GMT
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்திற்கு குக்கர் சின்னத்தை ஒதுக்க இயலாது என சமீபத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதனை எதிர்த்து  அக்கட்சியின் துணை பொதுச்செயலாளர் தினகரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனு நீதிபதி கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன், இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, இரட்டை இலை தொடர்பான வழக்கை இன்னும் 4 வாரத்திற்குள் முடிக்க வேண்டும் என டெல்லி உயர்நீதிமன்றத்திற்கு நீதிபதி உத்தரவிட்டார். முடிக்காத பட்சத்தில் தேர்தல் வருமேயானால், தினகரனுக்கு குக்கர் சின்னம் ஒதுக்க வேண்டும் என நீதிபதி ஆணையிட்டுள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்