100க்கும் மேற்பட்ட மக்கள் திடீர் சாலை மறியல் : அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினரும் பங்கேற்றதால் பரபரப்பு

புதுச்சேரியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2019-02-06 13:17 GMT
புதுச்சேரியில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அன்பழகன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட மக்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, உப்பளம் அம்பேத்கார் நகரில் இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கவும் மற்றும் காலியாக உள்ள அரசு மனையில் குடியிருப்பு கட்டித்தருவது உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வில்லை என்று குற்றம் சாட்டினர். அப்போது, ஒரு வாரத்திற்குள் அதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர். 
Tags:    

மேலும் செய்திகள்