சி.பி.ஐ. தனது வேலையை செய்ய வேண்டுமா? வேண்டாமா? - நிர்மலா சீதாராமன் கேள்வி

சி.பி.ஐ. வேலையை செய்தால், அது பழிவாங்கல்...? சொல்வதை செய்யாவிட்டால் சி.பி.ஐ. ஒரு கூண்டுக்கிளி..? என்று விமர்சிக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

Update: 2019-02-03 23:32 GMT
மேற்குவங்கத்தில் சி.பி.ஐ - போலீஸ் மோதல் குறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்,  சி.பி.ஐ. தனது வேலையை செய்ய வேண்டுமா? வேண்டாமா? என கேள்வி எழுப்பியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் கேள்விக்கு பதிலளித்த அவர், சி.பி.ஐ. தனது வேலையை செய்யும்போது, பழிவாங்கல் என சொல்வதும், அவர்கள் கேட்பதை செய்யாமல் இருந்தால் சி.பி.ஐ. கூண்டுக்கிளி என்றும் விமர்சிக்கப்படுவதாக தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்