"ஜி.எஸ்.டி அமல், ரூபாய் நோட்டு விவகாரம் எல்லாமே தவறு" - ப.சிதம்பரம் விமர்சனம்

ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது, புத்திசாலித்தனமற்ற மிக மோசமான முடிவு என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.

Update: 2018-12-01 08:17 GMT
ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்தது, புத்திசாலித்தனமற்ற மிக மோசமான முடிவு என முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார். டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ஜி.எஸ்.டி அமல் படுத்தியதில் எல்லாமே தவறு தான் எனவும், ஜி.எஸ்.டி வரி விதிப்பு என்ற யோசனையை தவிர, அனைத்துமே தவறானவை எனவும் கூறினார். முன்னாள் பொருளாதார தலைமை ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியம் போன்றவர்கள் பதவியில் இருக்கும்போது, இவை பற்றி ஏன் பேசுவதில்லை என கேள்வி எழுப்பியுள்ள ப.சிதம்பரம், மக்களை அச்சத்திலேயே அரசு வைத்திருப்பதாகவும தெரிவித்தார்.
Tags:    

மேலும் செய்திகள்