"கொல்லைப்புற வழியாக பதவிக்கு வந்தவர் ஸ்டாலின்" - முதலமைச்சர் பழனிசாமி பேச்சு

பாளையங்கோட்டையில் தொண்டர்கள் மத்தியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் கொல்லைப்புற வழியாக பதவிக்கு வந்தவர் என பேசினார்

Update: 2018-09-21 20:08 GMT
கன்னியாகுமரியில் நடைபெறும் எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்பதற்காக சென்றுள்ள முதலமைச்சர் எடப்படி பழனிசாமிக்கு நெல்லையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. 

பாளையங்கோட்டை கேடிசி நகரில் நடைபெற்ற வரவேற்பை ஏற்றுக் கொண்ட அவர், தொண்டர்கள் மத்தியில் பேசினார். அப்போது, அதிமுகவில் சாதாரண தொண்டர் கூட முதல்வராக முடியும் என குறிப்பிட்ட முதலமைச்சர், திமுக வாரிசு அரசியல் கட்சி என குற்றஞ்சாட்டினார். ஜெயலலிதா இருந்தபோது வெற்றி பெற்றது போலவே, வருகிற நாடாளுமன்ற தேர்தலிலும் அதிமுகவை வெற்றி பெறச் செய்ய வேண்டும் எனவும் தொண்டர்களை கேட்டுக் கொண்டார். 


Tags:    

மேலும் செய்திகள்