தனி அமைப்பு துவக்கம் என வெளிவந்த செய்தி : மு.க. அழகிரி மகன் மறுப்பு

மு.க. அழகிரி தனி அமைப்பு துவக்கப்போவதாக வெளிவந்த செய்தியை அவரது மகன் துரை தயாநிதி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

Update: 2018-09-14 13:52 GMT
மு.க. அழகிரி தனி அமைப்பு துவக்கப்போவதாக வெளிவந்த செய்தியை அவரது மகன் துரை தயாநிதி திட்டவட்டமாக மறுத்துள்ளார். உசிலம்பட்டியில் செய்தியாளர்களிடம் பேசிய துரை தயாநிதி, தனி அமைப்பு துவங்குவதாக இசக்கிமுத்து தெரிவித்தது, அவரது தனிப்பட்ட கருத்து என்றார். அதேநேரம், ஆலோசனைகள் மட்டும் தற்போது நடைபெற்று வருவதாகவும், துரை தயாநிதி தெரிவித்தார். 
Tags:    

மேலும் செய்திகள்