அதிமுக எம்.எல்.ஏ திருமணம் நிறுத்தம்

பவானிசாகர் எம்.எல்.ஏ. ஈஸ்வரனுக்கு இன்று திருமணம் நடைபெறவில்லை.

Update: 2018-09-12 04:44 GMT
* ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ ஈஸ்வரனுக்கும் , சந்தியா என்ற பெண்ணுக்கும் இன்று  சத்தியமங்கலம் அருகே உள்ள 
பண்ணாரியம்மன் கோவிலில் திருமணம் நடக்க இருந்தது. 

* ஆனால் திருமணம் நடக்க 9 நாட்கள் இருந்த நிலையில் மணமகள் சந்தியா திடீரென மாயமானார். இதையடுத்து,சந்தியாவின் தாயார் அவரை மீட்டு தர வேண்டும் என கடத்தூர் போலீசில் புகார் செய்தார்.

* எம்.எல்.ஏ.வுடனான திருமணம் பிடிக்காததால் மணமகள் சந்தியா மணப்பாறையில் இருந்தது தெரிய வந்தது. போலீசார் மணப்பாறை சென்று புதுப்பெண் சந்தியாவை மீட்டு வந்தனர்.

* அப்போது சந்தியா கூறும் போது, எம்.எல்.ஏ.வுக்கு வயது அதிகம் என்பதால் எனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை, பெற்றோர் என்னை கட்டாயப்படுத்தியதால் வீட்டை விட்டு சென்றேன் என தெரிவித்துள்ளார்.

* இதையடுத்து, திருமணம் நிச்சயிக்கப்பட்ட அதே நாளில்  எப்படியும் வேறு ஒரு நல்ல பெண்ணை பார்த்து திருமணம் செய்ய எம்.எல்.ஏ. மற்றும் அவரது உறவினர்களும் தீவிரமாக இருந்தனர்.

* எம்எல்ஏ., ஈஸ்வரனுக்கு  வேறு ஒரு உறவுக்கார பெண்ணுடன்  திருமணம் நடக்க இருந்தது. ஆனால் பெண்பார்க்கும் படலத்தில் ஏற்பட்ட சுணக்கத்தால், இன்று திருமணம் நடைபெறவில்லை.

* இன்னும் 2 மாதத்தில் எம்.எல்.ஏ.வுக்கு திருமணம் செய்து வைக்க முடிவு செய்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்