என் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் - ஸ்டாலினுக்கு வேலுமணி சவால்

அமைச்சர் பதவியை பயன்படுத்தி எந்த தவறையும் செய்யவில்லை என்றும் தன் மீதான குற்றச்சாட்டை நிரூபித்தால் அரசியலை விட்டு விலக தயார் எனவும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-11 09:09 GMT
அமைச்சர் பதவியை பயன்படுத்தி எந்த தவறையும் செய்யவில்லை என்றும் தன் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாவிட்டால் எதிர்க்கட்சி தலைவர் மற்றும் திமுக தலைவர் பதவிகளில் இருந்து ஸ்டாலின் விலக தயாரா?எனவும் உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். டெல்லியில் உள்ளாட்சி துறைக்கான விருதை பெற்றுக் கொண்ட பிறகு செய்தியாளர்களை, அமைச்சர் வேலுமணி சந்தித்தார். அப்போது அவர், உள்ளாட்சி துறை அமைச்சராக ஸ்டாலின் இருந்தபோதை விட, அதிக திட்டங்களை தான் செயல்படுத்தி வருவதாகவும் கூறினார். 

Tags:    

மேலும் செய்திகள்