பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை விவகாரம் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் வலியுறுத்துவோம் - அமைச்சர் மணிகண்டன்
பேரறிவாளன் உள்பட 7 பேர் விடுதலை தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் இன்று நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் வலியுறுத்தப்படும் என்று அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் பெரிய கண்மாயில் மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப் பணித்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் மணிகண்டன் கள ஆய்வு மேற்கொண்டார்.வைகை அணையில் இருந்து திறக்கப்படும் நீரை சிக்கனமாக பயன்படுத்துவது மற்றும் நீர்நிலைகளில் நீரை நிரப்புவது குறித்து அப்போது ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்த செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மணிகண்டன், பேரறிவாளன் உள்ளிட்ட
7 பேர் விடுதலை குறித்து இன்றைய அமைச்சரவை கூட்டத்தில் வலியுறுத்துவோம் என தெரிவித்தார்.