காங். முழு அடைப்பு வெறும் கண் துடைப்பு : அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு

காங்கிரசின் முழு அடைப்பு போராட்டம் வெறும் கண் துடைப்புக்காக நடத்தப்படுகிறது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

Update: 2018-09-08 14:29 GMT
காங்கிரசின் முழு அடைப்பு போராட்டம் வெறும் கண் துடைப்புக்காக நடத்தப்படுகிறது என்று பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் குற்றஞ்சாட்டி உள்ளார். புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் வருகிற 10- ம் தேதி நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டத்திற்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்திருப்பதை குறை கூறினார். இந்தியா , நிறைவாக பொருளாதார வளர்ச்சி பெற்றுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 19 மாநிலங்களில் பாஜக சிறப்பான ஆட்சி நடத்தி வருவதாக கேள்வி ஒன்றுக்கு பதிலளித்தபோது, நிர்மலா சீதாராமன் பெருமிதம் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்