தலைமை செயலகத்தில் 15-வது நிதிக்குழு கூட்டம் - தமிழக கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்பு

மாநிலங்கள் பாதிக்காத வகையில் பரிந்துரை செய்ய வலியுறுத்தல்

Update: 2018-09-05 19:58 GMT
வரும் 2020ஆம் ஆண்டு முதல் 15வது நிதிக்குழுவின் பரிந்துரைகள் அமலுக்கு வர உள்ள நிலையில், மாநிலங்களில் வளர்ச்சிப்பணிகள், நிதி ஒதுக்கீடு குறித்து அரசியல் கட்சிப் பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தி,  கருத்துக்களை நிதிக்குழு கேட்டறிந்து வருகிறது.இதன் ஒருபகுதியாக சென்னை  தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில்,  அதிமுக, திமுக, தேமுதிக, மார்க்சிஸ்ட், பகுஜன் சமாஜ்  உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திமுக மற்றும் மார்க்சிஸ்ட் பிரதிநிதிகள், மாநிலங்கள் பாதிக்காத வகையில் பரிந்துரைகளை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்
Tags:    

மேலும் செய்திகள்