மாணவர்களுக்கு 11 லட்சம் சைக்கிள் விநியோகம் - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு - முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி
கடந்த ஆண்டை விட, இந்தாண்டு கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். தமிழக பள்ளி கல்வித்துறை சார்பில், டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது, காமராஜர் விருது மற்றும் தூய்மை பள்ளி விருது வழங்கும் விழா, சென்னை - கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. விழாவில் விருதுகளை வழங்கி, உரையாற்றிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, 11 லட்சம் மாணவர் - மாணவிகளுக்கு இந்தாண்டு இறுதிக்குள், இலவச சைக்கிள் வழங்கப்பட்டு விடும் என உறுதி அளித்தார்.