மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது : பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம்

மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2018-09-04 10:58 GMT
மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்க கூடாது என பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை விடுத்துள்ளார்.இது தொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில் மேகதாதுவில் அணை கட்டுவது தொடர்பான செயல் திட்ட அறிக்கையை மத்திய நீர்வள ஆணையத்திடம் கர்நாடக அரசு, தன்னிச்சையாக சமர்பித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கர்நாடக அரசின் இந்த செயல், உச்ச நீதிமன்ற தீர்ப்பையும், காவிரி தீர்ப்பாயத்தின் உத்தரவையும் மீறும் செயல் என்றும் பல மாநிலங்களில் பாயும் காவிரி ஆற்றில் அணை கட்ட, ஒரு மாநில அரசு மட்டும் தன்னிச்சையாக முடிவெடுப்பது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது எனவும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேகதாதுவில் அணை கட்டப்பட்டால், லட்சக் கணக்கான தமிழக விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்பதால், கர்நாடக அரசு சமர்ப்பித்துள்ள செயல் திட்ட அறிக்கையை பரிசீலிக்க கூடாது எனவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார். 

Tags:    

மேலும் செய்திகள்