"தனது மகள் போன்ற சோபியாவை மிரட்டியது தமிழிசைக்கு தகுதியான செயல் அல்ல" - திருமாவளவன்

தனது மகளைப் போன்ற சோபியாவை மிரட்டியது, தமிழிசைக்கு தகுதியான செயல் அல்ல என விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-09-04 08:53 GMT
தனது மகளைப் போன்ற சோபியாவை மிரட்டியது, தமிழிசைக்கு தகுதியான செயல் அல்ல என  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சோபியாவை அவமானப்படுத்தியதுடன் தமிழிசை பொய் புகார்களை சொல்லியதாகவும் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

"சோபியா குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்" - வேல்முருகன்



சோபியாவின் குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்ய வேன்டும் என தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார்.

கருத்துரிமை மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் - சீமான் 



சோபியா மீது நடவடிக்கை எடுத்தது, கருத்துரிமையின் மீது நிகழ்த்தப்பட்ட கொடும் தாக்குதல் என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இங்கு நடப்பது ஜனநாயகமா? சர்வாதிகாரமா? எனவும் தாம் கேள்வி எழுப்புவதாக அறிக்கையில் சீமான் குறிப்பிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்