தமிழ் வழியில் பயிலும் 960 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை - அமைச்சர் செங்கோட்டையன்

தமிழ் வழியில் பயிலும் 960 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படஉள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

Update: 2018-08-31 08:17 GMT
தமிழ் வழியில் பயிலும் 960 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் கட்டப்படவுள்ள காவல்துறை கட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு 20 ஆயிரம் ரூபாயும், உயர்நிலைப் பள்ளியில் படிப்பவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்