அழகிரிக்கு ஜெ.அன்பழகன் பதிலடி...

கருணாநிதியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் அழகிரி, அவர் கருத்துக்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் விமர்சனம்.

Update: 2018-08-13 09:30 GMT
தி.மு.க.வினர் அனைவரும் கட்டுக்கோப்பாக இருப்பதாக அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் தெரிவித்துள்ளார். சென்னை தியாகராய நகரில் உள்ள தமது அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், நாளை நடைபெறும் கட்சியின் செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகள் குறித்து செயல் தலைவர் ஸ்டாலின், பொதுச் செயலாளர் அன்பழகன் ஆகியோர் அறிவிப்பார்கள் என கூறினார். கருணாநிதியால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டவர் அழகிரி, அவர் கருத்துக்களுக்கு பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை. 
அழகிரியுடன் திமுக நிர்வாகிகள் யாரும் தொடர்பில் இல்லை.


Tags:    

மேலும் செய்திகள்