கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்

சென்னை ஆழ்வார்பேட்டை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலம் குறித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேரில் வந்து விசாரித்தார்.

Update: 2018-08-05 10:39 GMT
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். தேசிய தலைவர்களும், மாநிலத் தலைவர்களும் நேரில் மருத்துவமனைக்கு வந்து நலம் விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், கருணாநிதியின் நலம் குறித்து விசாரிப்பதற்காக இன்று டெல்லியில் இருந்து விமானம் மூலம் சென்னை வந்தார்.விமான நிலையத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன்  காரில், காவிரி மருத்துவமனைக்கு சென்றார். அங்கு கருணாநிதி சிகிச்சை பெற்று வரும் நான்காவது மாடிக்குச் சென்ற அவர், கருணாநிதியை நேரில் சந்தித்தார்.அவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்களிடம் சிகிச்சை விவரம் குறித்து கேட்டறிந்தார். இதைத் தொடர்ந்து, திமுக செயல் தலைவர் ஸ்டாலின், மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி ஆகியோரிடம் கருணாநிதி நலம் குறித்து விசாரித்தார். இதன்பின்னர் குடியரசுத் தலைவர், அங்கிருந்து புறப்பட்டு, விமான நிலையம் சென்றார். அப்போது அவருடன் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உடனிருந்தார்.


Tags:    

மேலும் செய்திகள்