"108 ஆம்புலன்ஸ் எண்ணிக்கை ஆயிரமாக உயர்த்தப்படும்" - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளதாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 108 ஆம்புலன்ஸ்களின் எண்ணிக்கை ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளதாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் வெற்றி பெற்று புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இடம் கிடைத்துள்ள முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்ற அமைச்சர் விஜயபாஸ்கர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஆம்புலன்ஸ்களில் ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட உள்ளதாவும் குறிப்பிட்டார்.