8 வழிச்சாலை அமைந்தால் விபத்துகள் குறைந்து, உயிரிழப்பு குறையும் - முதலமைச்சர் பழனிசாமி

சேலம் 8 வழிச்சாலை மத்திய அரசின் திட்டம், திட்டத்திற்கு தமிழக அரசு உதவுகிறது - முதலமைச்சர் பழனிசாமி

Update: 2018-06-30 06:44 GMT
சேலம் - சென்னை பசுமை வழி சாலை திட்டத்தை நிறைவேற்ற அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேட்டுக்கொண்டுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விபத்துக்கள் மூலம் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பது அரசின் கடமை எனவும், அதற்கு ஏற்றவாறு சாலைகள் அமைப்பது அரசின் நிலைப்பாடு என்றும் தெரிவித்தார்.

* வாகனங்கள் பெருகிவிட்டதால் 8 வழிச்சாலை அவசியம், நவீன தொழில் நுட்பத்துடன் சாலை அமைக்கப்பட உள்ளது - முதலமைச்சர் * நில உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும், பயிருக்கான இழப்பீடு, மாற்று நிலம் மற்றும் பசுமை வீடு கட்டி தரப்படும் - முதலமைச்சர்

* பொதுமக்களின் பயன்பாட்டிற்காகவே 8 வழிச்சாலை, ஆனால் காழ்ப்புணர்ச்சி காரணமாக இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர் - முதலமைச்சர்


Tags:    

மேலும் செய்திகள்