நிலத்துக்கு இழப்பீடு வழங்க கோரிக்கை.. தலைமைச் செயலக வளாகத்தில் தள்ளுமுள்ளு - மும்பையில் பரபரப்பு

Update: 2023-08-29 17:12 GMT

மகாராஷ்டிராவில் கையகப்படுத்தப்பட்ட நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபடும் விவசாயிகள், தலைமைச் செயலக வளாகத்தில் உள்ள தடுப்பு வலை மீது குதித்தால் பரபரப்பு ஏற்பட்டது.

மகாராஷ்டிராவில், அரசு கையகப்படுத்திய நிலத்துக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், தலைமைச் செயலகம் அமைந்துள்ள மந்திரலாயா வளாகத்தில், விவசாயிகளை அழைத்து மாநில அமைச்சர் தாதாஜி பூஸே பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது விவசாயிகள் சிலர், முதல் தளத்தின் மீது போடப்பட்டுள்ள தடுப்பு வலை மீது குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை மும்பை போலீசார் கைது செய்து அழைத்துச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்