"கொரோனாவை தடுக்க அதிகாரப்பூர்வ மருந்துகள் இதுவரை வரவில்லை" - மத்திய அரசு விளக்கம்

கொரோனா வைரஸை தடுக்க அதிகாரப்பூர்வ மருந்துகள் இதுவரை வரவில்லை என்று மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

Update: 2020-10-31 07:16 GMT
கொரோனா வைரஸை தடுக்க அதிகாரப்பூர்வ மருந்துகள் இதுவரை வரவில்லை என்று, மத்திய அரசு விளக்கமளித்துள்ளது. கோவிட் -19 என்பது பாக்டீரியா வகையை சேர்ந்தது என்றும், இதை ஆஸ்பிரின் மருந்து மூலம் குணப்படுத்த முடியும் என்ற ஒரு செய்தி, வாட்ஸ்அப்பில் வலம் வந்துள்ளது. இதையடுத்து, கோவிட் -19 ஒருவைரஸ், அது பாக்டீரியா இல்லை என்றும், இதை குணமாக்க அதிகாரப்பூர்வ மருந்துகள் இதுவரை இல்லை என மத்திய அரசு கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்