உயிரை பணயம் வைத்து 'ஸ்டண்ட் '- பதற வைக்கும் வீடியோ காட்சி
மும்பையில் 22 மாடி கட்டிடத்தில் இளைஞர் ஒருவர் மிகவும் ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்த வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
மும்பையில் 22 மாடி கட்டிடத்தில் இளைஞர் ஒருவர் மிகவும் ஆபத்தான முறையில் ஸ்டண்ட் செய்த வீடியோ காட்சி ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. 22 மாடி கட்டிடத்தின் பக்கவாட்டு சிலாப்பில் இளைஞர் ஒருவர் தலைகீழாக நிற்க, அதனை அவரது நண்பர்கள் வீடியோ எடுத்துள்ளனர். பதற வைக்கும் இந்த வீடியோ காட்சிகள் வைரலானதும் விசாரணையை தொடங்கிய போலீசார் இளைஞரை கைது செய்துள்ளனர். இதுபோன்ற ஆபத்தான முயற்சிகளில் இளைஞர்கள் ஈடுபட வேண்டாம் என போலீசார் எச்சரிக்கையை விடுத்துள்ளனர்.