பஸ் டிக்கெட் கட்டணம் - தனி நீதிபதி உத்தரவுக்கு கேரள உயர்நீதிமன்றம் தடை

கேரளாவில் ஊரடங்கு தளர்வுகள் அமலில் உள்ள நிலையில் பழைய டிக்கெட் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என தனியார் பேருந்துகளுக்கு அரசு உத்தரவிட்டது.

Update: 2020-06-13 05:18 GMT
கேரளாவில் ஊரடங்கு தளர்வுகள் அமலில் உள்ள நிலையில், பழைய டிக்கெட் கட்டணத்தையே வசூலிக்க வேண்டும் என தனியார் பேருந்துகளுக்கு அரசு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கில் தனி நீதிபதி அரசின் உத்தரவுக்கு தடை விதித்தார். இதையடுத்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது . இந்நிலையில் தனி நீதிபதியின் உத்தரவுக்கு கேரள உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இதனால் பழைய கட்டண முறையே நடைமுறையில் இருக்கும் என கேரள அரசு தெரிவித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்