ஜூன் 19-ம் தேதி வரை உச்சநீதிமன்றம் செயல்பட முடிவு

கோடைகால விடுமுறையில் ஜூன் 19 ஆம் தேதி வரை செயல்பட உச்சநீதிமன்றம் முடிவு செய்யப்பட்டுள்ளது.

Update: 2020-05-16 04:12 GMT
கோடைகால விடுமுறையில், ஜூன் 19 ஆம் தேதி வரை செயல்பட  உச்சநீதிமன்றம் முடிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று நீதிபதிகள் கொண்ட ஐந்து அமர்வுகள், அனைத்து வகையான வழக்குகளையும், நிலுவை வழக்குகளையும், புதிய வழக்குகளையும் அவசர வழக்குகளையும் விசாரிக்க உள்ளனர். இந்த வழக்குகள் அனைத்தும் காணொலி வாயிலாக மே 18 -ஆம் தேதி தொடங்கி ஜூன் 19 வரை நடைபெற உள்ளன. கொரோனா நோய்த்தொற்று சூழலை ஆராய்ந்த பிறகு, ஜூன் 19-க்கு பின்னர் கோடை விடுமுறை விடுவது குறித்து முடிவு செய்யப்படவுள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்