டெல்லி கலவர வழக்கை விசாரித்த நீதிபதி முரளிதர் இடமாற்றம்

கலவர வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

Update: 2020-02-27 07:19 GMT
கலவர வழக்கை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதர், பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர்நீதிமன்றத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.  டெல்லி கலவரம் தொடர்பான வழக்கில் மத்திய அரசு மற்றும் டெல்லி காவல்துறைக்கு கண்டனம் தெரிவித்திருந்த நீதிபதி முரளிதர், கலவரம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து இன்று அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்நிலையில், இரவோடு இரவாக அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது ஒரு சாதாரண நிகழ்வு தான் என மத்திய அரசு தெரிவித்துள்ள நிலையில், திட்டமிட்டே அவர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. 

Tags:    

மேலும் செய்திகள்