டெல்லி கலவரத்தில் உயிரிழந்த தலைமை காவலர்: தியாகியாக அறிவிக்க கோரி உறவினர்கள் போராட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது.

Update: 2020-02-26 13:21 GMT
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்தது. இந்நிலையில் கலவரத்தின்போது கல்வீச்சு தாக்குதலில் உயிரிழந்த தலைமைக் காவலர் ரதன் லாலின் சொந்த ஊரான ராஜஸ்தான் மாநிலம் ஷிகார் பகுதியில் அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர். ரதன்லாலை தியாகியாக அறிவிக்கக் கோரி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.

Tags:    

மேலும் செய்திகள்