வயல்வெளியில் இறங்கிய தனியார் விமானம் - காயமின்றி தப்பிய விமான பயணிகள்
ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் அருகே விவசாய நிலத்திற்குள், இயந்திர கோளாறு காரணமான தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று தரையிறங்கியது.
ஆந்திர மாநிலம் அனந்தப்பூர் அருகே விவசாய நிலத்திற்குள், இயந்திர கோளாறு காரணமான தனியாருக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று தரையிறங்கியது. கர்நாடக மாநிலம் பெல்லாரியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்றபோது, இந்த சம்பவம் நடைபெற்றது. இதில் விமானத்தில் இருந்தவர்கள் அதிர்ஷடவசமாக காயமின்றி உயிர் தப்பினர். தகவல் அறிந்த சுற்றுவட்டார கிராம மக்கள், ஆர்வமுடன் வந்து விமானத்தை பார்த்து சென்றனர்.