சபரிமலை வழக்கு : "10 நாட்களுக்கு மேல் விசாரணை நடைபெறாது" - உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தகவல்
சபரிமலை வழக்கின் வாதங்களை 10 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.;
சபரிமலை வழக்கின் வாதங்களை 10 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார். சபரிமலையில், பெண்களை அனுமதிப்பது தொடர்பான மறு ஆய்வு மனுக்கள் மீது பல்வேறு கேள்விகளை எழுப்பிய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, இந்த விவகாரம் குறித்து 9 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை நடத்தும் என அறிவித்திருந்தார். இதையடுத்து இந்த வழக்கில் 10 நாட்களுக்கு மேல் விசாரணை நடைபெறாது என்றும் தலைமை நீதிபதி தெரிவித்தார்.