65 வயது நிரம்பிய முதியோர்களுக்கு திருமணத்தை நடத்தி வைத்த கேரள அமைச்சர்

கேரளாவில் 65 வயதை தாண்டிய முதியோர் இருவருக்கு முதியோர் இல்லத்தில் திருமணம் நடைபெற்றுள்ளது.

Update: 2019-12-30 02:05 GMT
கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள ராமபுரத்தை சேர்ந்த கிருஷ்ணய்யர் சமையல் வேலை செய்து வந்த நிலையில், அவரிடம்  கொச்சுஅனியன் என்பவர் உதவியாளராக இருந்துள்ளார். இதனிடையே  கிருஷ்ணய்யர் இறந்த நிலையில்,  அவருடைய மனைவி லட்சுமி அம்மாளை மாநகராட்சிக்கு சொந்தமான முதியோர் இல்லத்தில் அவரது உறவினர்கள் சேர்த்துள்ளனர்.  கொச்சுஅனியன் அடிக்கடி லட்சுமி அம்மாளை சந்தித்து ஆறுதல் கூறி வந்துள்ளார். ஒரு கட்டத்தில், ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாக இருக்கும் வகையில் திருமணம் செய்து கொள்ள இருவரும் முடிவு செய்துள்ளனர். இதனை முதியோர் இல்ல கண்காணிப்பாளர் வி.ஜி.ஜெயக்குமாரிடம் தெரிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டு , மாநகராட்சி மேயர் அஜிதா விஜயன் 2 முதியோர்கள் திருமண பந்தத்தில் இணையும் விழா  நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்டு அமைச்சர் மந்திரி சுனில்குமார்  திருமணத்தை நடத்தி வைத்தார். 

Tags:    

மேலும் செய்திகள்