ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கு : ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவல் 27-ம் தேதி வரை நீட்டிப்பு

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை, வரும் 27-ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-11-13 13:42 GMT
ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை, வரும் 27-ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்ட ப.சிதம்பரம் திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருடைய நீதிமன்றக் காவல் இன்றுடன் நிறைவடைந்த நிலையில், உடல்நிலை காரணமாக சிறையில் இருந்து வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது,  அமலாக்கத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை, மேலும் 14 நாட்கள் நீட்டிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். இதையடுத்து சிதம்பரத்தின் நீதிமன்ற காவலை வரும் 27-ஆம் தேதி வரை நீட்டித்து, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி அஜய்குமார் குகர் உத்தரவிட்டார்.
Tags:    

மேலும் செய்திகள்