எர்ணாகுளத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற படகு போட்டி : வெற்றி பெற்ற அணிக்கு ரூ.1 லட்சம் பரிசு

கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு படகு போட்டி நடைபெற்றது.

Update: 2019-10-07 02:43 GMT
கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு படகு போட்டி நடைபெற்றது. இந்திரா காந்தி  நினைவு படகுப் போட்டி கடந்த 1998ஆம் ஆண்டுக்கு பிறகு நடத்தப்படவில்லை. இந்நிலையில், சாம்பியன்ஸ் போட் லீக் என்ற பெயரில் கேரளாவின் பல பகுதிகளிலும் அம்மாநில அரசால் போட்டி நடைபெற்று வருகிறது.  அதனை ஒட்டி எர்ணாகுளத்தில் 20 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது படகுப் போட்டி நடைபெற்றது. 960 மீட்டர் தூரம் நடைபெற்ற இப்போட்டியில் 9 படகுகள் பங்கேற்றன.  சுமார் 95 பேர் ஒவ்வொரு படகிலும் அமர்ந்து படகை செலுத்தனர்.. இறுதியில் வெற்றி பெற்ற படகுக்கு ஒரு இலட்சம் ரூபாய் பரிசாக வழங்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்