திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரம்மோற்சவ விழா கோலாகலம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாள் விழாவை முன்னிட்டு மலையப்ப சுவாமி சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Update: 2019-10-02 02:19 GMT
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவத்தின் இரண்டாவது நாள் விழாவை முன்னிட்டு, மலையப்ப சுவாமி  சரஸ்வதி அலங்காரத்தில் அன்ன வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அப்போது நான்கு மாட வீதியிலும் கூடி நின்ற பக்தர்கள், கோவிந்தா கோவிந்தா என்று கோஷம் எழுப்பி, சாமி தரிசனம் செய்தனர். இதனிடையே வீதி உலாவில் பக்தர்கள் பல்வேறு வேடம் அணிந்தும், கோலாட்டம், பஜனைகள் 
பாடியும் பங்கேற்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்