மழை நிவாரண நிதி அனைத்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கே பயன்படுத்தப்படும் - கேரள முதலமைச்சர்

மழை நிவாரண நிதி அனைத்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கே பயன்படுத்தப்படும் எனவும் பொய் பிரச்சாரங்களை நம்ப வேண்டாம் எனவும் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2019-08-14 18:56 GMT
திருவனந்தபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கனமழைக்கு மாநிலம் முழுவதும் இதுவரை 95 பேர் பலியானதாக தெரிவித்துள்ளார். ஆயிரத்து 118 முகாம்களில் 1 லட்சத்து 89 ஆயிரம் மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். கனமழை மற்றும் மண்சரிவால் வீடுகளை முழுமையாக இழந்தவர்களுக்கு தலா 4 லட்ச ரூபாயும், வீட்டுடன் நிலத்தையும் இழந்தவர்களுக்கு தலா 10 லட்ச ரூபாயும் நிவாரணம் வழங்கப்படும் என பினராயி விஜயன் தெரிவித்தார். 

அரசுக்கு வழங்கப்படும் நிவாரண நிதி, அனைத்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முழுமையாக செலவிடப்படும் எனவும் அவர் தெரிவித்தார். நிவாரண நிதி முழுமையாக செலவிடப்படவில்லை என சிலர் மேற்கொள்ளும் பொய் பிரசாரங்களை பொதுமக்கள் நம்ப வேண்டாம் எனவும் பினராயி விஜயன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்