கேரளாவில் தொடரும் கனமழை... இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

கேரளாவில் தொடரும் கனமழையால் இன்று 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

Update: 2019-07-22 02:19 GMT
கேரள மாநிலத்தில் பரவலாக கனமழை பெய்து வரும் நிலையில், இன்று கண்ணூர், கோழிக்கோடு, வயநாடு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.திருவனந்தபுரம் மாவட்டத்தில் கடலலை சீற்றத்தால் கடலோர கிராமங்களை சேர்ந்த 143 குடும்பங்களில் உள்ள 603 பேர் 6 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்று வடமேற்கு திசையில் இருந்து மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திற்கு காற்று வீச வாய்ப்புள்ளதால் கேரளா, கர்நாடகா, தென்தமிழ்நாடு, இலட்சத்தீவு கடற்கரை மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என தேசிய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கண்ணூர் மாவட்டத்தில் அனைத்து கல்வி நிலையங்கள் மற்றும் கோட்டயம், பத்தணந்திட்டை மாவட்டங்களின் சில குறிப்பிட்ட பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்களுக்கும் சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களால் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

மேலும் செய்திகள்