கங்கை ஆற்றின் படித்துறையில் ஆரத்தி எடுத்த மக்கள் : சந்திரகிரகணம் நிறைவுற்றதை அடுத்து வழிபாடு
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள கங்கை ஆற்றின் படித்துறையில், அதிகாலையிலேயே மக்கள் ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினர்.
உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்துவாரில் உள்ள கங்கை ஆற்றின் படித்துறையில், அதிகாலையிலேயே மக்கள் ஆரத்தி எடுத்து வழிபாடு நடத்தினர். ஹரித்துவாரில் உள்ள கங்கை படித்துறையில் ஆரத்தி எடுத்து வழிபாடு செய்வது சாதாரண நாட்களிலேயே மிகவும் விமர்சையாக நடைபெறும். இந்நிலையில், இன்று அதிகாலை சந்திரகிரகணம் நிறைவு பெற்றதை அடுத்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் அங்கு கூடி கங்கைக்கு ஆரத்தி எடுத்து வழிபாடு செய்தனர்.