அத்திவரதரை தரிசிக்க குடியரசு தலைவர் வருகை : குடியரசு தலைவர் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடு

அத்திவரதரை தரிசிக்க குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் இன்று காஞ்சிபுரம் செல்வதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Update: 2019-07-12 09:05 GMT
2 நாள் பயணமாக டெல்லியிலிருந்து இன்று காலை சிறப்பு விமானம் மூலம் புறப்படும் குடியரசு தலைவர் பிற்பகல் சென்னை வருகிறார். பின்னர் ஹெலிகாப்டரில் காஞ்சிபுரம் செல்லும் குடியரசு தலைவர் அத்திவரதரை தரிசிக்கிறார். பின்னர், கார் மூலம் சென்னை திரும்பும் அவர் ஆளுநர் மாளிகையில் தங்குகிறார். சென்னை சட்டப்பல்கலைக்கழகத்தில் நடைபெறும் நிகழ்ச்சி உள்ளிட்டவற்றில் பங்கேற்கும் குடியரசு தலைவர், நாளை மாலை சிறப்பு விமானம் மூலம் ஆந்திர மாநிலம் ரேணிகுண்டாவுக்கு புறப்பட்டு செல்கிறார். அவரது வருகையையொட்டி சென்னை மற்றும் காஞ்சிபுரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்