"ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடைய 155 பேர் கைது" - மத்திய உள்துறை அமைச்சர் தகவல்

ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் 155 நபர்களை, இதுவரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Update: 2019-06-25 12:28 GMT
ஐ.எஸ். இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் 155 நபர்களை, இதுவரை தேசிய புலனாய்வு அமைப்பு கைது செய்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. பல மாநிலங்களை சேர்ந்த இளைஞர்கள் ஐ.எஸ். இயக்கத்தில் சேர்ந்துள்ளதாகவும், அந்த அமைப்பு இணையதளம் மற்றும் சமூக வலை தளங்கள் மூலம் தொடர்பு கொண்டு ஆதரவாளர்களை திரட்டி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து மத்திய -மாநில புலனாய்வு அமைப்புகள் உன்னிப்பாக கவனித்து, சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுத்து வருவதாக மத்திய உள்துறை இணை அமைச்சர் கிஷன் ரெட்டி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்