ஆந்திரா : மனைவியை கொலை செய்து தலையுடன் கணவன் காவல்நிலையத்தில் சரண்

ஆந்திராவில் கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கொலை செய்த கணவன், தலையுடன் காவல் நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2019-06-19 05:50 GMT
ஆந்திராவில் கள்ளக்காதல் விவகாரத்தில் மனைவியை கொலை செய்த கணவன், தலையுடன் காவல் நிலையத்தில் சரண் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சித்தூர் மாவட்டம் கலக்கடாவை சேர்ந்தவர் உசேன். இவர் தனது மனைவிக்கு வேறொரு நபருடன் தொடர்பு இருப்பதாக  சந்தேகித்து வந்துள்ளார். இது தொடர்பாக கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கதிராயசெருவு அருகே மனைவியின் கழுத்தை அறுத்து  கொலை செய்த உசேன், தலையுடன் கலக்கடா காவல் நிலையத்தில் சரணடைந்தார். இதனையடுத்து உசேனை கைது  செய்து போலீசார், விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

மேலும் செய்திகள்