கேரளாவில் நிகழ்ந்த துயர சம்பவம் : நோயாளிக்கு சிகிச்சை அளிக்க முன்வராத மருத்துவமனை

கேரளாவில் உயிருக்கு போராடி கொண்டிருந்த நோயாளிக்கு, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முன்வராததால், ஆத்திரமடைந்த நோயாளியின் மகள் மருத்துவமனை அதிகாரியை சரமாரியாக தாக்கியுள்ளார்.

Update: 2019-06-07 03:31 GMT
கேரளாவில் உயிருக்கு போராடி கொண்டிருந்த நோயாளிக்கு, அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க முன்வராததால், ஆத்திரமடைந்த நோயாளியின் மகள் மருத்துவமனை அதிகாரியை சரமாரியாக தாக்கியுள்ளார். இடுக்கி பகுதியை சேர்ந்த ஜேக்கப் தாமஸ் என்பவர் உடல்நலக்குறைவால் கோட்டயம் அரசு மருத்துவ கல்லூரிக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்படாததால் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் மருத்துவ கல்லூரி நிர்வாகத்தின் மீது கோபம் கொண்ட ஜேக்கப் தாமசின் மகள் ரினி, அங்கு வந்த மக்கள் தொடர்பு அலுவலரை கடுமையாக தாக்கினார். இதனால் மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்