புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவம் : ஜம்மு-காஷ்மீரில் கூடுதல் பாதுகாப்பு

புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவத்தையடுத்து ஜம்மு- காஷ்மீரில் கூடுதல் பாதுகாப்பு படையினரை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

Update: 2019-02-23 09:12 GMT
புல்வாமா தீவிரவாத தாக்குதல் சம்பவத்தையடுத்து ஜம்மு- காஷ்மீரில் கூடுதல் பாதுகாப்பு படையினரை கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்த உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து 40 கம்பெனி துணை ராணுவ வீரர்கள் உள்பட 100 கம்பெனி பாதுகாப்பு படை வீரர்கள் ஜம்மு- காஷ்மீருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான பயிற்சி மற்றும் விடுமுறை ரத்து செய்யப்பட்டுள்ளது. ஜம்மு - காஷ்மீரில் ஊடுருவியுள்ள தீவிரவாதிகளை வேட்டையாடவும், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கை கண்காணிக்கவும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Tags:    

மேலும் செய்திகள்