தேசிய அளவில் ஒரே அவசர உதவி எண் '112'

போலீஸ், தீயணைப்பு, ஆம்புலன்ஸ் என பல்வேறு அவசர தேவைகளுக்கு வெவ்வேறு உதவி எண்கள் நடைமுறையில் உள்ளன.

Update: 2019-02-20 03:29 GMT
போலீஸ், தீயணைப்பு, ஆம்புலன்ஸ் என பல்வேறு அவசர தேவைகளுக்கு வெவ்வேறு உதவி எண்கள் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில் எல்லா அவசர தேவைக்கும் நாடு முழுவதும் ஒரே அவசர உதவி எண்ணை அறிமுகப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டது. அதன்படி '112' என்ற எண்  அமலுக்கு வந்துள்ளது. டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத்சிங் மற்றும்  மேனகா காந்தி ஆகியோர் 112 எண்ணையும், செயலியையும் தொடங்கி வைத்தார். முதல் கட்டமாக,  தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, ஆந்திரா,  குஜராத், உள்ளிட்ட 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் நாடு முழுவதும் இந்த எண் அமலுக்கு வந்து விடும்.
Tags:    

மேலும் செய்திகள்