பிரதமர் மோடி இன்று வாரணாசி செல்கிறார்

முதன்முறையாக மின்மயமாக்கப்பட்ட டீசல் ரயிலை துவக்கி வைக்கிறார் : பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை துவக்கி வைக்கிறார் மோடி

Update: 2019-02-19 06:56 GMT
தனது சொந்தத் தொகுதியான உத்தரபிரதேச மாநிலம் வாரணாசிக்கு இன்று பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார்.  அங்கு பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை அவர் தொடக்கி வைக்கிறார். முதன்முறையாக மின்மயமாக்கப்பட்ட டீசல்  ரயிலை கொடியசைத்து துவக்கிவைக்கும் பிரதமர்,  கண்காட்சியைப் பார்வையிடுகிறார். பின்னர், ஸ்ரீ குரு ரவிதாஸ் கோயிலில் குரு ரவிதாஸ் பிறந்த இடத்தை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கு பிரதமர் அடிக்கல் நாட்டுகிறார். தொடர்ந்து, புதிதாக அமைக்கப்பட்ட பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் மதன் மோகன் மாளவியா புற்றுநோய் மையம், ஹோமி பாபா புற்றுநோய் மருத்துவமனையை பிரதமர் துவக்கி வைக்கிறார். பின்னர், வாரணாசியில் உள்ள ஆரே கிராமத்தில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை மோடி துவக்கி வைக்கிறார். 

Tags:    

மேலும் செய்திகள்