சபரிமலையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு
சபரிமலையில் தொடர்ந்து அமலில் இருந்து வரும் 144 தடை உத்தரவை வரும் ஜனவரி 5ம் தேதி வரை நீட்டித்து பத்தணந்திட்டை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சபரிமலையில் தொடர்ந்து அமலில் இருந்து வரும் 144 தடை உத்தரவை வரும் ஜனவரி 5ம் தேதி வரை நீட்டித்து பத்தணந்திட்டை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். சபரிமலையில் இளம் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் நடைபெற்றதால் தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தற்போது, அந்த தடை, தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. அனுமதியின்றி கூட்டம் சேர முயற்சித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.