பூட்டான் அதிபர் லோட்டேவிற்கு பிரதமர் மோடி தலைமையில் உற்சாக வரவேற்பு

மூன்று நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ள பூட்டான் பிரதமர் லோட்டேவிற்கு, பிரதமர் மோடி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Update: 2018-12-28 09:06 GMT
மூன்று நாள் சுற்றுப் பயணமாக இந்தியா வந்துள்ள பூட்டான் பிரதமர் லோட்டேவிற்கு, பிரதமர் மோடி தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பூட்டானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள லோட்டே ஷெரிங்,  தனது முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்துள்ளார். தொடர்ந்து பிரதமர் மோடியுடன் ஐந்து ஆண்டுகால வளர்ச்சி திட்டங்கள் குறித்து அவர் ஆலோசிக்கவுள்ளார். முன்னதாக டெல்லியில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்தில் அவர் மலர் அஞ்சலி செலுத்தினார்.
Tags:    

மேலும் செய்திகள்