நாடாளுமன்ற தேர்தல் பிரசாரம் : தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி
நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்திற்காக, பிரதமர் நரேந்திரமோடி ஜனவரி 27ஆம் தேதி தமிழகம் வருகிறார்.;
டெல்லியில், கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த பா.ஜ.க நிர்வாகிகள் கூட்டத்தில், பிரதமர் மோடி தலைமையில் நாடு முழுவதும் 100 பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள், பேரணிகள் நடத்த திட்டமிடப்பட்டது. அந்த வகையில் நாடாளுமன்ற தேர்தல் பிரசாரத்தை ஜனவரி முதல் வாரத்தில் பிரதமர் மோடி தொடங்குகிறார். ஜனவரி மாதம் 27ஆம் தேதி அவர் தமிழகம் வருகிறார். மத்திய அரசின் திட்டங்களை எடுத்துரைத்து மக்களிடம் பா.ஜ.கவுக்கு ஆதரவு திரட்ட உள்ளார். கஜா புயல் பாதிப்பை பார்வையிட பிரதமர் வர வேண்டும் என கோரிக்கை எழுந்து வரும் நிலையில் பிரசாரத்திற்கு அவர் தமிழகம் வருவது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி : வைகைச்செல்வன் கருத்து
தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி : டி. கே. எஸ். இளங்கோவன் கருத்து
தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி : மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் கருத்து
தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி : கே.டி.ராகவன் கருத்து
தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி : சி. பி. ராதாகிருஷ்ணன்
கருத்து
தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி : ரவீந்திரன் துரைசாமி கருத்து
மத்திய அரசின் திட்டங்களால் பறிபோகும் தமிழர்களின் உரிமைகளை முன்னிறுத்தி தேர்தல் பிரசாரம் மேற்கொள்ளப்படும் என தி.மு.க எம்.பி., டி.கே.எஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.
தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி - பீட்டர் அல்போன்ஸ் கருத்து
தமிழகம் வருகிறார் பிரதமர் மோடி : கரு நாகராஜன் கருத்து
கஜா புயலில் இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்காத பிரதமர் மோடியை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்துள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலை, விடுதலை போராட்டமாக காங்கிரஸ் பார்க்கிறது என்றும் அவர் கூறினார்.