நவீன ரயில் பெட்டி தொழிற்சாலையை பிரதமர் பார்வையிட்டார்
உத்தர பிரதேசத்தின் ரே பரேலி நகரில் உள்ள ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
உத்தர பிரதேசத்தின் ரே பரேலி நகரில் உள்ள ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நவீன ரயில் பெட்டி தொழிற்சாலையை பார்வையிட்ட அவர், அங்குள்ள பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு மாநிலத்திற்கான பல்வேறு வளர்ச்சி திட்டங்களை அறிவித்தார். அப்போது உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் உடன் இருந்தார். ஐந்து மாநில தேர்தலுக்கு பின்னர் பிரதமர் மோடி பங்கேற்கும் முதல் பொதுக்கூட்டம் இது என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக லக்னோ விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.