செம்மரம் வெட்டச் சென்ற 13 தமிழர்கள் கைது...

திருப்பதி அடுத்த ஐத்தேப்பள்ளி வனப்பகுதியில் செம்மரம் வெட்ட சென்ற தமிழகத்தை சேர்ந்த 13 பேரை அம்மாநில போலீசார் கைது.

Update: 2018-12-06 20:39 GMT
திருப்பதி அடுத்த ஐத்தேப்பள்ளி வனப்பகுதியில் செம்மரம் வெட்ட சென்ற தமிழகத்தை சேர்ந்த 13 பேரை அம்மாநில போலீசார் கைது செய்துள்ளனர்.திருப்பதி செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படை  ஆய்வாளர் பாஸ்கர் தலைமையில் போலீசார் இன்று ரோந்து பணியில் ஈடுபட்ட போது, அப்போது சந்திரகிரி மண்டலத்துக்கு உட்பட்ட ஐத்தேப்பள்ளியில் இருந்து  வனப்பகுதிக்குள் செம்மரம் வெட்ட சென்ற கூலித் தொழிலாளர்களை போலீசார் சுற்றிவளைத்து கைது செய்தனர். கைது செய்யப்பட்டவர்களில் பெரும்பாலும் விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது. 
Tags:    

மேலும் செய்திகள்