ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த பெண்கள்

மும்பை தாதர் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த இரண்டு பெண்களை ரயில்வே காவலர்கள் மீட்டனர்.

Update: 2018-12-06 08:03 GMT
மும்பை தாதர் ரயில் நிலையத்தில், ஓடும் ரயிலில் இருந்து கீழே விழுந்த இரண்டு பெண்களை ரயில்வே காவலர்கள் மீட்டனர். ரயில் வேகமாக சென்று கொண்டிருந்த போது, இரண்டு பெண்களும் வெவ்வேறு வழியாக பிளாட்ஃபாரத்தில் இறங்க முற்பட்டனர். ரயில் வேகமாக சென்று கொண்டிருந்ததால், இறங்க முற்பட்ட இருவரும் அடுத்தடுத்து தவறி விழுந்தனர். அங்கே பணியில் இருந்த காவலர்கள், கீழே விழுந்தவர்களை பத்திரமாக மீட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்